search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்"

    திண்டுக்கல்லில் பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முள்ளிப்பாடி டாஸ்மாக் குடோன் முன்பு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர்கள் எல்.பி.எப். மாரிமுத்து, சி.ஐ.டி.யு. ராமு, ஏ.ஐ.டி.யு.சி. அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில குழு உறுப்பினர் கோபால், மாவட்ட செயலாளர்கள் எல்.பி.எப். கருப்பையா, சி.ஐ.டி.யு. சீனிவாசன், ஏ.ஐ.டி.யு.சி. மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப். மாநில பேரவை தலைவர் பசீர்அகமது, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சிவமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ரூ.18 ஆயிரம் அடிப்படை சம்பளமாக நிர்ணயம் செய்ய வேண்டும், ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு தர வேண்டும், மேலும் டாஸ்மாக் மதுபாட்டில்கள் தனியார் காண்டிராக்ட் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது.

    ஒரு மது பாட்டில் பெட்டியை டாஸ்மாக் கடையில் இறக்க ரூ.5 கேட்டு மிரட்டுகின்றனர். இதற்கு தீர்வு காணவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டன.
    15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ராமநாதபுரம்:

    டாஸ்மாக் ஊழியர்களின் பணிவரன்முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றி அறிவித்திட வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம் அரண்மனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் பிரிவு மாவட்ட செயலாளர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். எல்.பி.எப். மாவட்ட செயலாளர் ராஜா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    எஸ்சி,எஸ்டி. பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்குமார், மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மோகன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி, துணை தலைவர் குருவேல் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கரூர்:

    டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சி.ஐ.டி.யு-எல்.பி. எப். சார்பில் பணி வரன் முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்திட வலியுறுத்தி கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். சி.ஐ. டி.யு. ஊழியர் சங்க கவுரவ தலைவர் கா.கந்தசாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் அப்பாசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், டாஸ்மாக் ஊழியர் சங்க பிரதிநிதிகள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வன், பத்மஸ்ரீகாந்தன், ராஜேஸ் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    இதில் அரசு ஊழியர்களுக்கு இணையான கால முறை ஊதியம், இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
    மூடிய மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்று பணியிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம்:

    மூடிய மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்று பணியிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் சி.ஐ.டி.யு. சங்க மாவட்டத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். 

    மாவட்ட துணைத் தலைவர் ராமபாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் தனுஷ்கோடி வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, மின்வாரிய சி.ஐ.டி.யு., சங்க மாநிலத் தலைவர் குருவேல், மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் பேசினர். 

    மாவட்ட பொருளாளர் நம்புராஜன், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயபாலன், பூமிநாதன், சரவணன், முனியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×